மொத்தமாக இருளில் மூழ்கிய நாடு... விளக்கம் கேட்டு வீதியில் இறங்கி போராடிய மக்கள்
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் திடீரென்று மொத்தமாக மின்சாரம் தடைபட்டதை அடுத்து நாடு முழுவதும் ஞாயிறன்று இருளில் மூழ்கியுள்ளது.
இது மூன்றாவது முறை
உள்ளூர் நேரப்படி, இரவு 8 மணிக்கு மின்சாரம் மொத்தமாக தடைபட்டுள்ளது. மட்டுமின்றி, கடந்த நான்கு மாதங்களில், நாடு முழுவதுமாக மின்சாரம் தடைபடுவது இது மூன்றாவது முறை என்றும் கூறப்படுகிறது.
@afp
மின்சாரம் தடைபட்டதால், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் இரண்டு டெர்மினல்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது.
மட்டுமின்றி, கென்ய மக்கள் பலர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், திங்களன்று பகல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் திரும்பியது.
நாசகாரர்களின் செயல் என அமைச்சர்
ஆனால் நைரோபியின் சில பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. சமூக ஊடகத்தில் கென்ய நாட்டவர் ஒருவர் தெரிவிக்கையில்,
Photo: Omwamba
மின்சாரம் தடைபட்டதற்கு கென்யா மின்சாரத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இது தங்களுக்கு வருமான இழப்பு, உணவு கெட்டுப்போதல் மற்றும் நேர இழப்புக்கு வழிவகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் மீண்டும் ஒரு மின் தடை ஏற்ப்படதற்கு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதுபோன்ற நிலை இனி ஏற்படாது என ஆகஸ்டு மாதம் அவர் உறுதி அளித்துள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், தற்போது ஏற்பட்ட மின் தடை என்பது நாசகாரர்களின் செயல் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |