வெளிநாட்டில் திருமண கனவில் இருந்த புலம்பெயர்ந்த இளைஞர்! வாழ்வையே மாற்றிய ஒரு அதிர்ஷ்டம்
வெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு Mahzooz லொட்டரி குலுக்கலில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த முகமது பொன்னம் குலம் என்ற 31 வயதான இளைஞரே 100,000 Dirham பணத்தை வென்றுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முகமது அங்கு வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார்.
தனது திருமண தேவைக்கான பணத்தை எதிர்பார்த்த சமயத்தில் இப்படியொரு அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது. முகமது கூறுகையில், உங்களுக்குத் தெரியும், திருமண நிகழ்வுக்கு பெரியளவில் செலவாகும் என்று!.
இந்த பணத்தை சரியான நேரத்தில் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் திருமணச் செலவு தவிர, என் அம்மாவுக்கு தங்கத்தில் பரிசும் வாங்க விரும்புகிறேன்.
இதோடு என் தொழில் வளர்ச்சிக்கும் செலவிடுவேன் என கூறியுள்ளார்.
முகமது இந்தாண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.