இந்திய செவிலியரின் மரண தண்டனை மேல்முறையீட்டை ரத்து செய்த வெளிநாட்டு நீதிமன்றம்
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மயக்க ஊசி போட்டுக் கொன்றதாக
ஏமன் நாட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய நிமிஷா பிரியா கடந்த 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏமன் நாட்டவரான தலால் அப்தோ மஹ்தி என்பவரிடம் இருந்து தமது கடவுச்சீட்டை மீட்கும் முயற்சியில் பிரியா மயக்க ஊசி போட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த நிலையில், ஏமன் செல்ல பிரியாவின் தாயார் விடுத்த கோரிக்கை மீது ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை இந்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக, 2017 முதல் நடைமுறையில் உள்ள இந்தியப் பிரஜைகளுக்கான பயணத் தடை இருந்தபோதிலும், ஏமனுக்குச் செல்ல அனுமதி கோரி, பிரியாவின் தாயார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
பிரியாவை மீட்க நடவடிக்கைகள்
மஹ்தியின் குடும்பத்தினரிடம் பேசி, தமது மகளை மீட்கும் முயற்சியில் பிரியாவின் தாயார் களமிறங்கியுள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், ஏமனுக்கு பயணத் தடை தளர்த்தப்படலாம் எனவும், குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், குறிப்பிட்ட காலத்திற்கும் இந்தியப் பிரஜைகள் நாட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இழப்பீடு அளிக்கும் முயற்சியை கைவிடக் கோரியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம், சட்டத்திற்கு உட்பட்டு பிரியாவை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |