கத்தார் கால்பந்து உலக கோப்பைக்காக தனியாக காரிலேயே சென்ற கேரள இளம்பெண்! சுவாரசிய புகைப்படங்கள்
கேரளாவில் இருந்து உலக கோப்பை கால்பந்து போட்டியையும், மெஸ்ஸியையும் காண 5 குழந்தைகளின் தாயான இளம்பெண்ணொருவர் கத்தாருக்கு காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் naaji noushi (33) என்ற கேரள பெண் கத்தாருக்கு காரிலேயே சென்றுள்ளார். இவர் தனது மகேந்திரா தார் காரில் தனது கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்றார்.
பின்னர், அங்கிருந்து ஓமன் வரை கப்பலில் காரை எடுத்துச் சென்று அங்கிருந்து காரில் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார்.
naaji கூறுகையில், நான் மெஸ்ஸியின் தீவிர ரசிகை, அவர் விளையாடுவதை காண கத்தாருக்கு வந்தேன். என்னுடைய துணிச்சலான சாகச பயணங்களுக்கு என் கணவர் noushad எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார்.
வழியில் புட் பாய்சன் ஆகிவிடக்கூடாது மற்றும் பணத்தை மிச்சம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நானே சமைத்து சாப்பிடுகிறேன், அதற்கான பொருட்களை வைத்துள்ளேன்.
Naaji Noushi
நான் இது போன்ற வெகுதூர பயணத்தில் இருக்கும் போது குழந்தைகளை என் தாயார் கவனித்து கொள்வார் என கூறியுள்ளார்.
டிசம்பர் 31ஆம் திகதி வரை கத்தாரில் தங்கியிருக்க naaji முடிவு செய்துள்ளார்.
Naaji Noushi
skysports