சூட்கேஸில் அடைத்து விமானத்தில் கடத்தப்பட்ட பாடசாலை சிறுமி... பாலியல் அடிமையாக்கிய நபர்
பிரேசில் நாட்டில் கனமான சூட்கேஸ் ஒன்றுடன் விமானத்தில் ஏற பிரயாசைப்பட்ட நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
சிறுமியை விமானத்தில் கடத்த முயன்ற
குறித்த நபரிடம் இருந்து 12 வயதேயான பாடசாலாலை மாணவி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 28ம் திகதி தொடர்புடைய சிறுமியை பாடசாலை ஒன்றின் வெளியே இருந்து 42 வயதான டேனியல் மோரேஸ் என்பவர் கடத்தியது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
@cen
இந்த நிலையில், சூட்கேஸில் அடைத்து சிறுமியை விமானத்தில் கடத்த முயன்றதை அடுத்தே, மோரேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிசாரிடம், நடந்தவற்றை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தொடர்புடைய சிறுமியை கடத்தும் நடவடிக்கையில் 23 வயது பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அந்த பெண்மணியே, சிறுமியை மயக்கமடைய செய்து வாகனம் ஒன்றில் முதலில் கடத்தியுள்ளார்.
தொடர்ந்து அந்த சிறுமியின் கால்கள் பிணைக்கப்பட்டு, சூட்கேஸ் ஒன்றில் அடைத்துள்ளனர். ஆனால், சிறுமி கடத்தப்படும் சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு பாடசாலை மாணவி, உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்க, அதன் அடிப்படையிலேயே மோரேஸ் கைதாகியுள்ளார்.
பாலியல் அடிமையாக பயன்படுத்த
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமியை பொலிசார் மீட்டுள்ளனர். படுக்கை அறையில் விலங்கிடப்பட்ட நிலையில், காயங்களுடன் சிறுமி காணப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில், சிறுமி துஸ்பிரயோகத்திற்கு இரையாகியுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.
@cen
சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த நபர் தொடர்ந்து தம்மை மிரட்டியதாகவும், தம்மை அவர் பாலியல் அடிமையாக பயன்படுத்தப் போவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துஸ்பிரையோகத்தை காணொளியாக பதிவு செய்து, அந்த நபர் தமது காதலிக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான நிலையில், மோரேஸ் பணியாற்றி வந்த நிறுவனம் அவரை நீக்கியுள்ளது.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய மோரேஸ் மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும், 30 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |