பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதல்... குவியலாக சடலங்கள்: பகீர் கிளப்பும் சம்பவம்
கிழக்கு புர்கினா பாசோவில் சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் குழுவால் சுமார் 30 அப்பவி மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கோமண்ட்ஜரி மாகாணத்தில் உள்ள கொடியல் கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஆயுதமேந்திய ஒரு பெரிய குழு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல் சரியானவை என்றால், இது புர்கினா பாசோவில் நடந்த தாக்குதலில் மிக மோசமான ஒன்று என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
நைஜர் மற்றும் மாலியின் எல்லையில் உள்ள பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பெருகிய முறையில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் இரண்டு ஸ்பானிஷ் ஊடகவியலாளர்கள் மற்றும் வேட்டையாடலுக்கு எதிரான ரோந்துப் படையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு ஐரிஷ் நாட்டவர் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிராமத்திற்குள் திடீரென்று புகுந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனாமாக துப்பாக்கியால் தாக்கியதில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதலில் சுமார் 20 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான கிராமத்தில் குடியிருப்பாளர்கள் முக்கியமாக குர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலையே, தீவிரவாதிகள் கிராமத்தை குறிவைத்ததாக கூறப்படுகிறது.