வேண்டுமென்றே கொன்றேன்... பச்சிளம் குழந்தைகளை படுகொலை செய்த பிரித்தானியர் வாக்குமூலம்
தாம் கொலை செய்த சிறார்கள் இருவரின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
லூசி லெட்பி 5 ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் சிறார் மருத்துவமனை ஒன்றில் 7 குழந்தைகளை படுகொலை செய்த நர்ஸ் ஒருவர் வேண்டுமென்றே செய்ததாக கைப்பட எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
பிரித்தானிய மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய 32 வயது லூசி லெட்பி, இந்த விவகாரம் தொடர்பில் தமது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று தற்போது சிக்கியுள்ளது. அதில், தனக்கு வாழ தகுதி இல்லை எனவும், தான் நல்லவள் அல்ல எனவும் வேண்டுமென்றே அவர்களைக் கொன்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
@PA
மேலும், தாம் மிக மோசமான பெண் எனவும், அதனாலையே இந்த பாதகத்தை செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தற்போது அம்பலமாகியுள்ளது. மட்டுமின்றி, தாம் கொலை செய்த சிறார்கள் இருவரின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
செஷையரில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் ஒரு வருடத்தில் ஏழு குழந்தைகளைக் கொன்றதாகவும் மேலும் பத்துப் பேரை கொல்ல முயன்றதாகவும் லெட்பி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
2015 ஜூன் மாதம் முதல் 2016 ஜூன் வரையில் செவிலியர் லூசி லெட்பி 5 ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
@PA
மட்டுமின்றி 5 ஆண் பிள்ளைகளையும் 5 பெண் பிள்ளைகளையும் இவர் கொலை செய்ய முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் தொடர்பிலான விசாரணை மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதில், பிறந்து ஐந்து நாட்களேயான பச்சிளம் குழந்தையின் மூக்கில் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஊசியால் காற்றை நிரப்பி, குறித்த குழந்தை மாரடைப்பால் இறக்கும் வகையில் இரக்கமின்றி நடந்துகொண்டுள்ளார்.
30 வாரத்திலேயே பிறந்துள்ள அந்த ஆண் குழந்தை வெறும் 800 கிராம் மட்டுமே இருந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தாலும், குழந்தை பிழைத்துக்கொள்ளும் என்றே மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஜூன் 14ம் திகதி குறித்த குழந்தையை செவிலியர் லூசி லெட்பி கொடூரமாக கொலை செய்துள்ளார் என விசாரணையில் அம்பலமானது.