எங்கள் கொலைவெறியை முழுமையாகத் தீர்த்து வருகிறோம்: இஸ்ரேலிய இராணுவத் தளபதி பேச்சு
மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்கள், 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு காணப்படாத அளவிலான படுகொலையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்படுவது உறுதி
இஸ்ரேல் இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைவரான மேஜர் ஜெனரல் அவி ப்ளூத், 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்குப் படைகள் கொலை செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், இனி பாலஸ்தீனிய கல் எறிபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1967 ஆம் ஆண்டு, இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே நடந்த ஆறு நாள் போரைக் குறிக்கிறது.
இந்தப் போரின் காரணமாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர். இதன் விளைவாக, மேற்குக் கரை, காஸா முனை மற்றும் கோலான் குன்றுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகளில் இஸ்ரேல் மக்கள் குடியேறத் தொடங்கினர்.
கடந்த ஆண்டு மட்டும் மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கல் எறிந்த 42 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாகவும், யாராவது உன்னைக் கொல்ல வந்தால், நீயே அவர்களை முதலில் கொன்றுவிடு என்பதுதான் வழக்கம் எனவும் மேஜர் ஜெனரல் அவி ப்ளூத் தெரிவித்துள்ளார்.
கல் எறியும் பாலஸ்தீனியர்
மேற்குக் கரைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக் கோட்டை பாலஸ்தீனியர்கள் நெருங்கினால், அவர்களைக் கால்களில் சுட இஸ்ரேலிய வீரர்களுக்கு அனுமதி உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ஹாரெட்ஸ் பத்திரிகையின் தலையங்கம் ஒன்று ப்ளூத்தின் அணுகுமுறையை விமர்சித்ததுடன், அதனை இன ஒதுக்கல் போன்ற ஓர் அமைப்புமுறை என்றும் குறிப்பிட்டது; இதில் படைவீரர்கள் கல் எறியும் பாலஸ்தீனியர்களைச் சுடுகிறார்கள், ஆனால் யூதர்களைச் சுடுவதில்லை என்றும் சாடியுள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல்களைத் தொடர்ந்து, அனுமதியின்றி இஸ்ரேலுக்குள் நுழைய அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் முயற்சித்துவரும் நிலையில், இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. காஸாவில் போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணி அனுமதிகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |