ஜீன்ஸ் அணியக்கூடாது... இப்படித்தான் முடிவெட்டிக்கொள்ளவேண்டும்: தடைகள் விதித்துள்ள வடகொரிய அதிபர்
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், தன் நாட்டு மக்கள் குறிப்பிட்ட வகை ஜீன்ஸ் அணியக்கூடாது, குறிப்பிட்ட விதமாக முடி வெட்டிக்கொள்ளக்கூடாது என்பது போன்ற தடைகளை விதித்துள்ளார்.
மேற்கத்திய கலாச்சாரத்தை அனுமதித்தால் நம் நாடு அழிந்துவிடும், இளைய தலைமுறையை அது பாதிக்கும் என்று கூறி, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் கிம்.
அதன்படி, உடலை ஒட்டிய skinny jeans வகை உடைகளுக்கும், mullet வகை சிகையலங்காரத்துக்கும் வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய சட்டப்படி 15 விதமான சிகையலங்காரங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து மக்கள் சிகையலங்காரம் செய்துகொள்ளலாம்.
தலைமுடிக்கு கலர் கலராக வர்ணம் பூசுவோர், கண்ட இடங்களில் ஓட்டை போட்டு கம்மல் போடுபவர்கள் என தொடர்ந்து விதிகளை மீறுவோர், சட்டப்படி தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய அரசு எச்சரித்துள்ளது.