சீனாவிடமிருந்து மருத்துவ கருவிகள் வாங்கிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய கிம் ஜாங் உன்!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் வெளியுறவத்துறை அமைச்சகத்தன் மூத்த அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக தென் கொரிய செய்தி நிறுவனமாக Daily NK செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 23ம் திகதி Daily NK வெளியிட்டுள்ள செய்தியின் படி, வட கொரியா தலைநகர் Pyongyan-ல் திறக்கப்படவுள்ள புதிய பொது மருத்துவமனைக்கு தரம் குறைவான மருத்துவ கருவிகள் வாங்கியதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனை நிறைவேற்றியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த கிம், மருத்துவமனைக்காக ஜேர்மனியிலிரு்நது கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளார்.
எனினும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சிறிய அளவிலான நிதியே இருந்த காரணத்தினால், அதிபர் விருப்பத்திற்கு மாறாக வட கொரிய அண்டை நாடான சீனாவிலிருந்து நல்ல விலையில் மருத்துவ கருவிகளை வாங்கியுள்ளனர்.
தற்போது கருவிகள் இல்லாத காரணத்தினால் திட்டமிட்ட படி மருத்துவமனையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், திறக்கும் திகதி ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சக அதிகாரிக்கு அதிபர் உத்தரவின் பேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், மேலும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பணியலிருந்து நீக்கப்பட்டார் என Daily NK செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், வட கொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பலமுறை பொய்யாகியுள்ளன. செய்தி வெளியான சில வாரங்களில் அந்த அதிகாரிகள் பொதுவெளியில் தோன்றி குறித்த செய்தி பொய் என நிரூபித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் Daily NK, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) குழுவான the National Endowment for Democracy-யிடமிருந்து நிதியுதவி பெறுகிறது குறிப்பிடத்தக்கது.