இந்த நாடு மிக விரைவில் பசி பட்டினியில் சாகக்கூடும்! ஐநா அதிர்ச்சி தகவல்
வடகொரியாவின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவதால், அந்நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பசி பட்டினியில் சாகக்கூடிய அபாயத்தில் உள்ளனர் என்று ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னின் வடகொரியா கடந்த சில மாதங்களாக உணவு நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆளும் அரசாங்கம் அதை வெளி உலகத்திற்கு மறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து கொடிய கொரோனா வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, வட கொரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் காரணமாக, பொருளாதாரமும் குறிப்பாக நாட்டின் முக்கிய பங்குதாரரான சீனாவுடனான வர்த்தகமும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
கடந்த ஜூன் மாதம், அரசு நடத்தும் KCTV தொலைகாட்சி, வடகொரியா 'உணவு நெருக்கடியை' எதிர்கொள்கிறது என்று ஒப்புக்கொண்டது. ஏனெனில் நாட்டின் உணவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு விவசாயத் துறை மிகவும் கடினமான நிலைமை சந்தித்து வருவதாக கூறியது.
அதே சமயத்தில், வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன், நாட்டின் உணவு நிலைமை "பதட்டமாக உள்ளது" என்று அறிவித்தார்.
இப்போது, மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டோமாஸ் ஓஜியா குயின்டானா (Tomas Ojea Quintana) கூறியதாவது: வட கொரியாவின் உள்ளூர் மக்களும் சாதாரண குடிமக்களும் "கவுரவமான வாழ்க்கையை வாழ தினசரி போராடிக்கொண்டு இருக்கின்றனர்", மேலும் இந்த உணவு பற்றாக்குறை விரைவில் மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடும் என அவர் கூறினார்.
மேலும், "மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பட்டினியின் அபாயத்தில் உள்ளனர்," என்று அவர் கூறினார்.
Photo: AFP-Yonhap
"ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் விதிக்கப்பட்ட தடைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் தேவைப்படும்போது மனிதாபிமான மற்றும் உயிர் காக்கும் உதவிகளை எளிதாக்க வேண்டும்" என்று கூறிய குயின்டானா, சாதாரண மக்கள் தங்கள் தலைவர்களின் செயல்களால் துன்பத்தை அனுபவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, சில தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு ஐநா தலைவர்கள் மற்றும் உதவி அமைப்புகளை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், வடகொரியா அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான அதன் செயல்பாடுகள் காரணமாக பல சர்வதேசத் தடைகளை விதித்துள்ளது.
இந்த தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் சாதாரண மக்கள் பட்டினியால் இறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.