சுற்றுலாப்பயணிகளை வரவேற்க வடகொரிய ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு சுத்தமாக சுற்றுலா என்ற விடயமே இல்லாத நிலை காணப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் துவங்கியது வடகொரியா.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் வகையில் வடகொரிய ஜனாதிபதி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை
வடகொரியாவைப் பொருத்தவரை, அந்த நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரியாது.
தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படும் செய்திகள் மூலம் மட்டுமே வடகொரியாவில் நடப்பதை மற்ற நாடுகள் ஓரளவு தெரிந்துகொள்ளமுடியும்.
இந்நிலையில், சுற்றுலா மீது கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார் வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்.
அவ்வகையில், Wonsan Kalma beach resort என்னும் ஒரு பிரம்மாண்ட ரிசார்ட்டை திறந்துவைத்துள்ளார் கிம். வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில், செவ்வாயன்று அந்த ரிசார்ட்டைத் திறந்துவைத்துள்ளார் அவர்.
சுமார் 20,000 சுற்றுலாப்பயணிகள் தங்கும் வகையில், அறைகள், உணவகங்களுடன், நீச்சல், விளையாட்டு மற்றும் பிற கேளிக்கை வசதிகள் அந்த ரிசார்ட்டில் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடைகள் காரணமாக வடகொரியாவின் பொருளாதார நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா போன்ற சில விடயங்கள் மூலம் மட்டுமே வடகொரியா வெளிநாட்டுப் பணத்தைப் பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |