அமெரிக்காவுடன் மோதல்-பேச்சுவார்த்தை... இரண்டிற்கும் தயாராகும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் என இரண்டிற்கும் வட கொரிய தயாராக வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார்.
வட கொரியா தலைநகர் Pyongyang-ல் நடந்த மூத்த தலைவர்களுடனான கூட்டத்தின் போது கிம் ஜாங்-உன் இவ்வாறு பேசியுள்ளார்.
பைடன் நிர்வாகம் குறித்து கிம் ஜாங்-உன் நேரடியாக கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் பேசி கிம்-ஜாங்-உன், நாட்டின் கண்ணியத்தையும் சுயாதீன வளர்ச்சிக்கான நலன்களையும் பாதுகாப்பதற்காக மோதலுக்கு முழுமையாகத் தயாராக வேண்டும்.
அதே போல் அமைதியான சூழலுக்கும் வட கொரியாவின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.