வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் எடுத்துள்ள புதிய சபதம்! வெளிச்சத்திற்கு வந்த முக்கிய தகவல்
வட கொரிய தலைவர் கிம் நாட்டின் இராணுவ போர் செயல்திறனை மேம்படுத்த சபதம் செய்திருக்கிறார் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.
கே.சி.என்.ஏ வெளியிட்ட செய்தியில், வட கொரிய தொழிலாளர் கட்சியின் (WPK) மத்திய இராணுவ ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்திற்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தலைமை தாங்கினார்.
இதன் போது கொரிய தீபகற்பத்தில் சூழ்நிலை மாறிவருவதால் வட கொரிய இராணுவத்தின் போர் திறனை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இந்த கூட்டத்தில் WPK-வின் மத்திய இராணுவ ஆணைய உறுப்பினர்கள், வட கொரிய மக்கள் இராணுவத்தின் (KPA) நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் WPK-வின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் வட கொரியாவின் ஆயுதப்படைகளின் வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு விவாதிக்கப்பட்டது.
வட கொரிய இராணுவத்தின் நிலைமை மற்றும் நிலையை கிம் ஜாங் உன் ஆய்வு செய்ததாக கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் வட கொரிய இராணுவத்தின் முக்கிய நோக்கங்களை அமைப்பதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான திட்டங்களை கிம் ஜாங் உன் வகுத்தார்.
வட கொரிய இராணுவம் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் வலுவாக பாதுகாக்க வேண்டும் மற்றும் கட்சி, புரட்சிகர பணிகள், அரசு மற்றும் மக்களின் நலன்கள் மற்றும் சோசலிசத்தை பாதுகாக்க வேண்டும் என்று கிம் கூறியதாக கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.