தாய்க்கு தனிப்பட்ட முறையில் அஞ்சலி! ராணி உயிரிழந்த இடத்துக்கு தனி விமானத்தில் பரந்த மன்னர் மூன்றாம் சார்லஸ்
ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, வியாழனன்று பால்மோரல் கோட்டையில் உயிரிழந்தார்.
மன்னர் தனது மனைவியுடன் தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிக்க பல்மோரால் கோட்டைக்கு செல்கிறார்.
12 நாட்கள் கடுமையான பொது ஈடுபாட்டிற்குப் பிறகு, மன்னர் மூன்றாம் சார்லஸ் இப்போது தனது தாயின் இழப்பிற்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதற்காக ராணி எலிசபெத் தனது கடைசி நாட்களை செலவிட்ட அவரது விருப்பமான விடுமுறை இல்லமான ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு தனது மனையுடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குயின் கன்சோர்ட் கமிலாவுடன், மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் RAF நார்டோல்ட்டிலிருந்து அபெர்டீன் விமான நிலையத்திற்கு பறந்தார்.
அவர்கள், ஸ்காட்லாந்தில் பிரதான கோட்டையிலிருந்து ஏழு மைல் தொலைவில், கெய்ர்ன்கார்ம்ஸில் உள்ள எஸ்டேட்டில் உள்ள அவரது சொந்த வீடான Birkhall-ல் தங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த ராணிக்கு கடமைகளை செய்த கடுமையான 12 நாட்கள் கழித்து, இங்கு அவர் சற்று ஓய்வெடுப்பார் என கூறப்படுகிறது
இந்த எஸ்டேட் மறைந்த ராணிக்கு நெருக்கமானதாகா இருந்தது மேலும் அவர் பல மகிழ்ச்சியான காலங்களை கழித்த இடமாக இருந்தது.
இதனிடையே, ஸ்காட்லாந்தில் உள்ள எஸ்டேட் அருகே உள்ள ஹீத்லேண்ட் வழியாக ராணி எலிசபெத் இளம் பெண்ணாக நடந்து செல்லும் புகைப்படத்தை அரச குடும்பம் டிட்டரில் பகிர்ந்துள்ளது.
திங்கட்கிழமை ராணியின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, மன்னரின் விருப்பத்திற்கு இணங்க அரச குடும்பம் மட்டும் மேலும் 7 நாட்களுக்கு துக்கத்தைக் கடைப்பிடிக்கிறது.