பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரி: ஒரு புதிய தகவல்
King Charles learnt about Harry Meghan’s UK relocation plan, only 48 Hours Before: ஹரி, மேகன் தம்பதியர் பிரித்தானியா திரும்புவது குறித்து, 2 அல்லது மூன்று நாட்களுக்கு முன்புதான் மன்னர் அறிந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு புதிய தகவல்
விடயம் என்னவென்றால், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே முடிவு செய்யும், ஹரி, தான் பிரித்தானியா திரும்பும் விடயம் குறித்து, வழக்கம்போல முன் கூட்டியே மன்னருக்குத் தெரியப்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்ப இருக்கிறார்கள் என்னும் விடயம் சமூக ஊடகங்களில் லீக் ஆவதற்கு 48 அல்லது 72 மணி நேரம் முன்புதான் அந்த தகவல் மன்னருக்கும் தெரியுமாம்.

ஜூலை மாதம் பிரித்தானியா வந்து தன் தந்தையை ஹரி சந்தித்தபோது கூட, தாங்கள் பிரித்தானியா திரும்பும் திட்டம் குறித்து அவர் மன்னரிடம் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, பிரித்தானியா திரும்பியதும் எசகு பிசகாக ஹரி எதையாவது செய்துவிடுவாரோ என்னவோ என்று எண்ணித்தானோ என்னவோ, அவசர அவசரமாக அரண்மனை வட்டாரம், ஹரியும் மேகனும் சராசரி மக்களாகவே கருதப்படுவார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல, தங்களை சாதாரண மக்கள் என மன்னர் அறிவித்துள்ள விடயம் தங்களை ஆச்சரியமடையவைத்ததாக ஹரியும் மேகனும் கூறியுள்ளதைப் பார்த்தால், மன்னர் எடுத்த முடிவு சரிதானோ என்றே தோன்றுகிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |