நான் செய்த தவறை நீயும் செய்துவிடாதே: இளவரசர் வில்லியமை வேண்டிக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்
பிரித்தானிய ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, அவர்களுக்கு தங்கள் குடும்பத்தைவிட மன்னராட்சிமீது கவனம் செலுத்துவதுதான் முக்கியம் என்னும் ஒரு நிலை காணப்பட்டுவந்தது.
இந்நிலையில், மன்னர் சார்லஸ் தன் மகனும் வருங்கால பிரித்தானிய மன்னருமான இளவரசர் வில்லியமிடம் அன்புக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
சார்லஸ் இளவரசர் வில்லியமுக்கு வைத்த அன்புக் கோரிக்கை
’நான் என் வாழ்க்கையில் செய்த தவறை நீயும் செய்துவிடாதே’ என மன்னர் சார்லஸ் தன் மகனான இளவரசர் வில்லியமிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதாவது, நான் என் குடும்பத்தைவிட ஒரு மன்னராக என் கடமைக்குதான் முக்கியத்துவம் கொடுத்தேன். அதே தவறை நீயும் செய்துவிடாதே, நீ உன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன் என்று வில்லியமிடம் கூறியுள்ளார் சார்லஸ்.
உண்மையாகவே, சார்லஸ் ஒரு கட்டத்தில் தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார்.
அதை ஹரி தனது சுயசரிதையான ஸ்பேர் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்பா தன் கடமையில் மூழ்கிவிட்டார், எங்களுடன் விளையாடுவதில்லை. அதனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே ஒரு பிரிவே ஏற்பட்டுவிட்டது என்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் ஹரி.
அதை சார்லசும் ஒப்புக்கொண்டுள்ளார். நான் என் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட்டிருக்கவேண்டும், நான் அதைச் செய்யவில்லை என்று கூறியுள்ளார் சார்லஸ்.
ஆகவேதான், நான் செய்த தவறை நீயும் செய்துவிடாதே. நீ உன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என தன் மகன் வில்லியமுக்கு அன்புக் கோரிக்கை வைத்துள்ளார் சார்லஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |