சும்மா வரவில்லை சுதந்திரம்... நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லசின் செய்தி

King Charles III
By Balamanuvelan Aug 15, 2025 09:20 AM GMT
Report

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சரணடைந்த நாளை நினைவுகூரும் வகையில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், இன்றைய சூழலில் உலகுக்கே மிகவும் அவசியமான சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

VJ Day

சும்மா வரவில்லை சுதந்திரம்... நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லசின் செய்தி | King Charles Message To The People Of The Country

பிரித்தானியா, அமெரிக்கா முதலான நாடுகள், இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சரணடைந்த நாளை VJ Day என்னும் பெயரில் நினைவுகூர்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா முதலான நாடுகளின் கூட்டணியான நேச நாடுகள் படையிடம் ஜப்பான் சரணடைந்ததே இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்ததை மறுப்பதற்கில்லை. 

சும்மா வரவில்லை சுதந்திரம்... நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லசின் செய்தி | King Charles Message To The People Of The Country

VJ Day அல்லது Victory over Japan Day என்பது, பிரித்தானியாவில் ஆண்டுதோறும் ஆகத்து மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

மன்னர் சார்லசின் செய்தி

இந்நிலையில், VJ தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மன்னர் சார்லஸ் தனது உரையில் மிக முக்கியமான சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சும்மா வரவில்லை சுதந்திரம்... நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லசின் செய்தி | King Charles Message To The People Of The Country

உலக நாடுகள் பலவற்றிற்கிடையிலான மோதல்கள், என்று மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.

ஆக, தனது VJ தின உரையில் உலகுக்கே செய்தி கூறும் வகையில் சில விடயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார் மன்னர் சார்லஸ்.

உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மோதல்கள், போரின் மோசமான விளைவுகள் போர்க்களத்துடன் முடிந்துவிடுவதில்லை என்பதற்கு VJ தின நினைவு நாள் ஒரு நினைவூட்டல் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.

VJ தின ஹீரோக்கள், சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத்தந்ததுடன் விட்டுவிடவில்லை, பெற்ற சுதந்திரத்தை நாம் எப்படி பாதுகாத்தாகவேண்டும் என்பதற்கான முன்மாதிரியையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.

முன்னெப்போதும் ஒன்றிணைந்து போரிடாத பல நாடுகள், இரண்டாம் உலகப்போரின்போது, தங்கள் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளில் காணப்படும் வேறுபாடுகளையும் தாண்டி ஒன்றிணைந்து போரிட்டார்கள்.

போரின்போதும் அமைதியின்போதும், மிகப்பெரிய ஆயுதம் என்பது நாம் கைகளில் சுமக்கும் ஆயுதம் அல்ல, அது நாம் கோர்க்கும் கைகள் என்பதை அவர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளார்கள். அது நமக்கெல்லாம் முக்கியமான ஒரு பாடமாகும்.

போரின்போது, போர்க்களத்தில் போரிட்டவர்கள் மட்டுமல்ல, போர்க்கைதிகளாக பிடிபட்டவர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த அப்பாவி மக்கள் என பல தரப்பினரும் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தார்கள்.

எல்லைக் கட்டுப்பாடுகளுக்காக ஜேர்மனி செலவிடும் தொகை எவ்வளவு?

எல்லைக் கட்டுப்பாடுகளுக்காக ஜேர்மனி செலவிடும் தொகை எவ்வளவு?

இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இரண்டாம் உலகப்போரில் அவர்கள் சந்தித்த அனுபவங்கள், போர் என்பது போர்க்களத்தில் மட்டும் பாதிப்பை, இழப்பை ஏற்படுத்துவதில்லை, அது மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.

தனது உரையை முடிக்கும்போது, இந்தியாவிலுள்ள நாகலாந்தின் தலைநகரான கோஹிமாவில் அமைந்துள்ள, காமன்வெல்த் போர் கல்லறைகள் அமைந்துள்ள நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார் மன்னர் சார்லஸ்.

சும்மா வரவில்லை சுதந்திரம்... நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லசின் செய்தி | King Charles Message To The People Of The Country

‘நீங்கள் இங்கிருந்து வீட்டுக்குச் செல்லும்போது, எங்களைக் குறித்து உங்கள் வீடுகளிலிருபவர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் நாளைய தினத்துக்காக, நாங்கள் எங்கள் இன்றைய தினத்தைக் கொடுத்தோம்’ என அந்த நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US