பிரித்தானிய மன்னரால் கோபமடைந்த அண்டை வீட்டார்: என்ன காரணம்?
பிரித்தானிய மன்னர் சார்லஸின் கிராமப்புற வீட்டின் அருகே வசிப்பவர்கள், எஸ்டேட்டுக்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளின் கூட்டத்தால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
40,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்
1980யில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி காமிலாவின் தனிப்பட்ட இல்லமாக Gloucestershireயில் Highgrove House மற்றும் தோட்டம் வாங்கப்பட்டது.
இந்த வீடு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தொண்டுக்காக பொது சுற்றுப்பயணங்களை நடத்துகிறது மற்றும் தோட்டங்கள் ஆண்டுக்கு 40,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
இந்த நிலையில், எஸ்டேட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால், மன்னர் சார்லஸின் கிராமப்புற வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கோபமடைந்துள்ளனர்.
அதாவது, சுற்றுலாப் பயணிகளால் தங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடமில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே இவர்கள் பிரித்தானியாவின் மிகவும் விலையுயர்ந்த பார்க்கிங் அனுமதிகளில் ஒன்றிற்கு பணம் செலுத்துகிறார்கள்.
கார் பார்க்கிங் பிரச்சனை
ஆனால், 640 பவுண்டுகள் அதிக கட்டணம் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் வாகனங்களை தங்களது வீடுகளுக்கு வெளியே நிறுத்த முடியாது.
மேலும், நகரம் 'கார் பார்க்கிங்' ஆகப் பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். அனுமதிகளின் விலை, லண்டனின் மிகவும் விலையுயர்ந்த சில பெருநகரங்களின் விலையை விட இரு மடங்கு அதிகம்.
எனினும், மேற்குத் தெருவில் உள்ள இடங்களில் பாதி மட்டுமே உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதாவது நிறுத்த இடம் கண்டுபிடிக்க அவர்கள் சிரமப்படுகிறார்கள். பார்க்கிங் நிலைமையை 'அனைவருக்கும் இலவசம்' என்று குடியிருப்பாளர்கள் விவரித்தாலும், இது அனுமதிகள் அதிக விலையை நியாயப்படுத்தாது என்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |