அன்று மகாராணியார் சோகமே உருவாக அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்த மன்னர் சார்லஸ்: அந்த இடத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
தன் கணவர் மறைந்தபோது, புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார் மகாராணியார்.
அந்த இடம் பிரித்தானிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் ஆகும்.
மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் இயற்கை எய்தியபோது, விண்ட்சரிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், ஆறுதல் கூறக்கூட அருகில் யாரும் இல்லாமல், மகாராணியார் சோகமே உருவாக தனிமையில் அமர்ந்திருந்த அந்த காட்சியை யாரும் மறந்திருக்கமுடியாது.
image - news.sky
தற்போது, அதே இடத்தில் தன் தாயின் இறுதிச்சடங்கின்போது மன்னர் சார்லஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
உண்மையில் அந்த இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரித்தானியாவை ஆட்சி செய்யும் எந்த மன்னரானாலும், மகாராணியானாலும், தேவாலயத்தில் அந்த இடத்தில்தான் அமருவார்களாம்.
500 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில் அமர்ந்துதான் மன்னர் எட்டாம் ஹென்றி தேவாலய ஆராதனையில் பங்கேற்பார் என்பது பிரித்தானிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
image - news.sky