பிரித்தானிய மன்னரின் மெழுகு சிலை சேதம்! கேக்கைக் கொண்டு தாக்கிய ஜோடி..வைரலான வீடியோ
கேக்கை கொண்டு தாக்கியவர்கள் காலநிலை ஆர்வலர்கள் என தெரிய வந்துள்ளது
நேற்று முன்தினம் ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் சிலர், விலைமதிப்பு மிக்க ஓவியத்தின் மீது உருளைக்கிழங்குகளை வீசி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக்கைக் கொண்டு அடித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரின் மெழுகு சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இந்த அருங்காட்சியகத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா, இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் ஆகியோரது மெழுகு சிலைகளும் உள்ளன.
இந்த நிலையில் டி-சர்ட் அணிந்திருந்த ஒரு ஆணும், பெண்ணும் கையில் பை ஒன்றை கொண்டுவந்து சிலைக்கு அருகில் சென்றனர். திடீரென தங்கள் டி-சர்ட்டை அவர்கள் கழற்றியபோது, உள்ளே Just Stop Oil என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த வெள்ளை நிற டி-சர்ட்டை அணிந்திருந்தனர்.
? BREAKING: JUST STOP OIL CAKES THE KING ?
— Just Stop Oil ⚖️?? (@JustStop_Oil) October 24, 2022
? Two supporters of Just Stop Oil have covered a Madame Tussauds waxwork model of King Charles III with chocolate cake, demanding that the Government halts all new oil and gas licences and consents.#FreeLouis #FreeJosh #A22Network pic.twitter.com/p0DJ8v3XVB
பின்னர் அனைத்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமங்களையும், ஒப்புதல்களையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கூறி, கேக்கை எடுத்து மன்னர் சார்லஸின் சிலை மீது இருவரும் அடித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, கேக்கை அடித்த இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கைது செய்யப்பட்ட நபர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.