புற்றுநோய் சிகிச்சையில் உள்ள மன்னர் சார்லஸ்.,உடல்நலனை பாதுகாக்க செய்யப்போகும் விடயம்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது உடல்நலத்தைப் பாதுகாக்க, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் மேடின் சேவையில் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோய்க்கான சிகிச்சை
மன்னர் சார்லஸ் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு முன்பு புற்றுநோக்கான சிகிச்சையைத் தொடங்கினார். எனினும் அவர் அரண்மனை சுவர்களுக்கு பின்னால் குறைந்த முக்கிய உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொண்டு வருகிறார்.
சார்லஸ் தொடர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மருமகள் கேட்டும் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்காக கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டதையும் வெளிப்படுத்தினார்.
உடல்நிலையை பாதுகாக்க
ஆனால், எவ்வளவு காலம் அவர் சிகிச்சை பெறுவார் என்பது தெரியாத நிலையில், மருத்துவ ஆலோசனையின்படி அவர் முழுநேரப் பணிகளுக்கு திரும்புவதைக் குறிக்கவில்லை. எனினும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் ஆர்வமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஈஸ்டர் மேட்டின் சேவையில், மன்னர் சார்லஸ் அரச குடும்பத்தை விட்டு பிரிந்து அமர்ந்து, தனது உடல்நிலையை பாதுகாத்துக் கொள்வார் என தெரிய வந்துள்ளது.
இந்த ஏற்பாடானது மன்னரின் மருத்துவக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டது மற்றும் சார்லஸின் குணமடைவதற்கான சாதகமான அறிகுறியாக இது வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |