சென்னை ஜெயித்தவுடனே கோலி சொன்ன வார்த்தை! டிரண்ட் ஆக்கும் டோனி ரசிகர்கள்
பெங்களூரு அணியின் கேப்டன் ஆன விராட் கோலி, டோனியின் ஆட்டத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆப் சுற்றில், டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில், சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கடைசி கட்டத்தில் 2 ஓவருக்கு 24 ஓட்டங்கள் தேவை என்ற போது, சென்னை அணி கொஞ்சம் தடுமாறியது. அதன் பின் ஆட்டம் 8 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் தேவை என்ற போது, களத்தில் இருந்த டோனி அற்புதமாக சிக்ஸர் பறக்கவிட்டார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, மொயின் அலி அவுட் ஆனதால், டோனி எங்கு அடிக்கப்போகிறார்.
இதுவே பழையா டோனியாக இருந்தால் அசால்ட்டாக முடித்துவிடுவார் என்று சென்னை ரசிகர்கள் சிலர் புலம்பிக் கொண்டிருந்த போது, டோனி அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் வகையில் பவுண்டரிகள் விளாசி வழக்கம் போல் தன்னுடைய பினிசிஷ் ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து, காட்டினார்.
இதைக் கண்ட அவரது ரசிகர்ள் பழைய டோனி வந்துவிட்டார் என்றெல்லாம் இணையத்தில் வைரலாக்கினர், அதுமட்டுமின்றி கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் பலரும் டோனியின் இந்த ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர்.
Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021
அதன் படி இந்திய அணியின் தற்போதைய கேப்டனும், பெங்களூரு அணியின் கேப்டனும் ஆன கோலி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டோனி மீண்டும் வந்துவிட்டார் என்பதை king is back, ஒரு அற்புதமான பினிஷிங் ஆட்டம்.
என்னுடைய இருக்கை விட்டு வெளியில் குதித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட டோனி ரசிகர்கள் கோலியின் டுவிட்டை டிரண்டாக்கி வருகின்றனர்.