முதல்முறையாக பொதுமுடக்கத்தை சந்திக்கும் நாடு! ஒற்றை விமானத்தால் ஏற்பட்ட நிலை
பசுபிக் தீவான Kiribati முதல் முறையாக கொரோனா பொதுமுடக்கத்திற்குள் நுழைகிறது.
உலகில் கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து கடந்த வாரம் வரை வெறும் 2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நாடு தான் பசுபிக் தீவான Kiribati.
கிரிபட்டி உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளில் ஒன்றாகும். இது அதன் அருகிலுள்ள கண்டமான வட அமெரிக்காவிலிருந்து சுமார் 5,000 கிமீ (3,100 மைல்கள்) தொலைவில் உள்ளது.
அதிகபட்சம் 1.2 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் இந்த தீவில் கடந்த வாரம் வரை 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று பிஜி தீவிலிருந்து ஒரு விமானம் Kiribati-க்கு வந்தது.
அதில் வந்த மொத்தம் 54 பயணிகளில் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 மாதங்களில் இந்த தீவிற்கு வந்த முதல் சர்வதேச விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, அதில் வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மூலமாக, தனிமைப்படுத்தல் வசதியின் பாதுகாப்புக் குழுவின் மூன்று பணியாளர்களுக்கு தொற்று பரவியது.
மேலும், இந்த வசதியில் வேலை செய்யாத மற்றொரு நபரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் Kirtibati தீவில் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு இப்போது பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.