வரும் ஐபிஎல் ஏலத்தில் இந்த இந்திய வீரர் 20 கோடிக்கு மேல் ஏலம் போவார்! முன்னாள் வீரர் கணிப்பு
இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல்.ராகுல் ஏலத்திற்கு வந்தால், நிச்சயமாக 20 கோடிக்கு ஏலம் போவார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் துவக்க வீரரான கே.எல்.ராகுல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இஷான் கிஷன் மற்றும் யுவேந்திர சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதலிரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், குறிப்பாக இரண்டாவது போட்டியில் 49 பந்தில் 70 ஓட்டங்கள் குவித்தார்.
அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், கே.எல் ராகுல் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்றால் நிச்சயமாக அதிக விலைக்கு ஏலம் போவார்.
ஒவ்வொரு அணியும் கே.எல் ராகுலை தங்களது அணியில் எடுக்க முயற்சிக்கும். என்னை பொறுத்தவரையில் கே.எல் ராகுல் குறைந்தது 20 கோடிக்கு மேல் ஏலம் போவார் என்று கணித்துள்ளார்.