கோலியை திட்டமிட்டு காலி செய்தாரா கங்குலி? பிசிசிஐ-ன் திட்டம் தான் என்ன? கசிந்த முக்கிய தகவல்
கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு பல காரணங்கள் வெளி வரும் நிலையில், இதன் பின்னணியில் கங்குலியும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுவர் விராட் கோலி, அப்படிப்பட்ட விராட் கோலியால், இதுவரை இந்திய அணிக்கு 5 முதல் 6 ஆண்டுகளாக இருந்த ஒரு ஐசிசி கோப்பை கூட வாங்கித்தர முடியவில்லை.
இதனால் இவர் கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. இதையடுத்து கோலி வரும் உலகக்கோப்பை டி20 தொடருக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கோலியின் இந்த முடிவுக்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில், தற்போது கங்குலியின் மாஸ்டர் பிளானும் ஒரு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையை வெல்லவில்லை, அதுமட்டுமின்றி ஏதேனும் முக்கியமான தொடர்களின் போட்டியின் போது, அணி தேர்வில் கோலி சொதப்பி வருகிறார்.
அதுமட்டுமின்றி வீரர்களிடையே இது பதற்றமான சூழ்நிலையும் உருவாகுவதால், அது இந்த முறை நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கங்குலி டோனியை உலகக்கோப்பை ஆலோசகராக நியமித்திருக்கிறார்.
கங்குலிக்கு நாம் பிசிசிஐ தலைவராக இருக்கும் போது, இந்திய அணி கோப்பை அடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக அவருக்கு கோலி மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை, இருப்பினும் பதற்றம், தவறான அணித்தேர்வு.
டெஸ்ட் சாப்யின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான மைதானம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகாமக இருந்த நிலையில், இரண்டு ஸ்பின்னர், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் கோலி களமிறங்கி தோற்றார்.
இது கடும் விமர்சனத்தைப் பெற்றது. அடுத்து, அரையிறுதி, இறுதிப் போட்டியின்போது வீரர்களின் பதற்றம். இந்த பதற்றத்தைப் போக்க வேண்டும் என்றால், டோனி போன்ற கூல் மேன் அணியுடன் பயணிப்பது மிகமிக அவசியம் என்பதாலே கங்குலி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
டோனி ஓய்வுக்கு பின் இந்திய அணியில் தனிக்காட்டு ராஜாவா இருந்த கோலி, தனக்கு போட்டியாக யாருமே இல்லை என்ற ஆளுமையில் இருந்துள்ளார்.
இருப்பினும் இவரால் ஒரு ஐசிசி கோப்பை கூட இந்தியாவுக்கு கிடைக்கவில்லையே என்ன செய்வது என்று யோசித்து, பிசிசிஐ பல மாதங்களாக திட்டம் தீட்டி உலகக்கோப்பையை இந்த முறை விட்டுவிடக் கூடாது என்பதற்காக கோலிக்கு இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்து அவரை கேப்டன் பதவியை விட்டு விலக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.