கேப்டன் சந்திப்பில் அஸ்வினை புகழ்ந்து தள்ளிய கோலி!
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த கேப்டன் சந்திப்பில் விராட் கோலி அஸ்வினை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சமீபத்தில் நடந்த முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை பிளேயிங் லெனில் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், கோலிக்கும் அஸ்வினுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக வதந்திகள் பரவின. அதேபோல், கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, அஸ்வின் தான் பிசிசிஐ-யில் கோலி கேப்டன்சி குறித்து புகார் தெரிவித்ததாக கட்டுக்கதைகள் பரவின.
அதேவேளை, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்தார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த கேப்டன் சந்திப்பில் அஸ்வின் பற்றி விராட் கோலி கூறியதாவது, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அஸ்வின் துணிவுடன் பந்து வீசுகிறார். அவர் தனது பந்துவீச்சை மேம்படுத்தியுள்ளார்.
ஐபிஎல்-ல் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் பந்து வீசியுள்ளார், சுழற்பந்து வீச்சாளர்கள் போட தயங்கும் பல பந்துகளை அவர் கெத்தாக போட்டுள்ளார்.
பந்து வீசும் விதம், வேறுபாடுகள் மற்றும் நேர்த்தியாக வீசுவதில் நல்ல அனுபவம் பெற்றுள்ளார். அவர் முழுநம்பிக்கையுடன் இருக்கிறார்.
அஷ்வின் தனது பந்து பந்துவீச்சை மேம்படுத்தியன் வெகுமதியாக உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார் என அஸ்வினை கோலி புகழ்ந்துள்ளார்.