கடவுள் கொடுத்த திறமையை தோழர்கள் அழும்போது தான்.. விராட் கோலி வெளியிட்ட பதிவு
ரசிகர்களை கலங்க வைத்த ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் அழுத புகைப்படம்
இந்த புகைப்படம் தான் எனக்கு மிகவும் அழகிய விளையாட்டு தொடர்பான புகைப்படம் என நெகிழ்ந்த கோலி
சர்வதேச டென்னிஸில் ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் குறித்து கிரிக்கெட் வீரர் விரட்ட கோலி பதிவிட்டுள்ளார்.
சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது கடைசி போட்டியில் தோல்வியுற்றார். அத்துடன் ரசிகர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விலகினார்.
மேலும் அவருடன் இணைந்து விளையாடிய ரபேல் நடாலும் அழுதது ரசிகர்களை கலங்க வைத்தது. நட்சத்திர ஜோடி தோல்வியுற்றது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் பெடரர், நடால் சோகத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவரது பதிவில்,
'போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படி சோகமாக இருப்பார்கள் என்று நினைக்க முடியுமா, அதுதான் விளையாட்டின் அழகு. இந்த புகைப்படம் தான் எனக்கு மிகவும் அழகிய விளையாட்டு தொடர்பான புகைப்படம்.
உங்கள் தோழர்கள் உங்களுக்காக அழும்போது, உங்கள் கடவுள் கொடுத்த திறமையை ஏன் உங்களால் செய்ய முடிந்தது என்று உங்களுக்கு தெரியும். இந்த இருவருக்கும் மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை' என தெரிவித்திருந்தார்.
Fiona Hamilton/Tennis Australia via Getty Images