பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமான வீரரை கை கொடுத்து பாராட்டிய கோஹ்லி! கமெராவில் பதிவான காட்சி
பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமான பஞ்சாப் பந்து வீச்சாளரை கோஹ்லி கை கொடுத்து பாராட்டிய வீடியோவை இணையவாசிகள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அசைக்க முடியாத அணியாக கோஹ்லியின் பெங்களூரு அணி இருந்து வந்தது. அந்தளவிற்கு 6 போட்டிகளில் 1 தோல்வி 5 வெற்றி என கெத்தாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்குள் இருந்தது.
ஆனால், பெங்களூரு அணியின் இந்த கெத்தை, நேற்று பஞ்சாப் அணி தூள் தூள் ஆக்கியது என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பாக பஞ்சாப் அணியில் ஹர்ப்ரீத் பிரார் பெங்களூரு அணியின் முக்கிய புள்ளிகளான கோஹ்லி, மேக்ஸ்வே, டிவில்லியர்ஸ் என இந்த மூன்று பேரையும் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் விழ்த்தினார்.
இவர்கள் தான் ஒட்டு மொத்த பெங்களூரு அணியின் முதுகெலும்புகள், இவர்களை வீழ்த்தி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார் ஹர்ப்ரீத் பிரார். 4 ஓவர்கள் வீசிய இவர் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையடுத்து போட்டி முடிந்த பின் ஹர்ப்ரீத் பிராரை சந்தித்த கோஹ்லி, அவருக்கு கை கொடுத்து தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். இந்த வீடியோவை இணையவாசிகள் டிரண்டாக்கி வருகின்றனர்.