தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் கொரோனா தாக்குவது ஏன்? வெளிவந்த உண்மை தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் கொரோனா தாக்குவது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம்ன பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்தை ஊசியின் மூலம் செலுத்தும் போது நுரையீரலின் கீழ்பகுதி மட்டுமே பாதுகாப்பு பெறும் என்பதால், 2 டோஸ் போட்ட பிறகும் தொற்று வர வாய்ப்புள்ளது.
தற்போதைய தடுப்பூசியால் நுரையூரலின் மேல்பகுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் முக கவசம் அணிவது அவசியம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அதே சமயம் கொரோனா தீவிரமாவதை தடுப்பூசி தடுக்கம் என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை குறைக்கும் என்றும் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.