கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க மூத்த அதிகாரிகள் ராஜினாமா! துயர சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பு
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த வெற்றிக்கு கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக இதில் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலர் அதில் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து KSCA தலைவர் ரகுராம் பட்டிற்கு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தார்மீகப் பொறுப்பெற்று ராஜினாமா
துயர சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பை காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஷங்கர் மற்றும் ஜெய்ராம் ஆகிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
KSCAக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், "கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாகவும், எங்கள் பங்கு மிகவும் குறைவாக இருந்தாலும், தார்மீகப் பொறுப்பின் காரணமாகவும், நேற்றிரவு நாங்கள் KSCAவின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம்" என கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |