ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் விலகல்! கிரிக்கெட்டுக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என தகவல்: என்ன ஆனது?
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து கொல்கத்தா அணி வீரர் குல்தீப் யாதவ் விலகியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரத்தில் பயிற்சியின் போது குல்தீப் யாதவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரலிருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குல்தீப் யாதவ் காயம் குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது குறிப்பாக பீல்டிங் பயிற்சியின் போது குல்தீப் யாதவிற்கு முழங்காலில் கடுமையான ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பிறகு அவர் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பே இல்லை என்பதால், அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என பிசிசிஐ அதிகாரி கூறினார்.
இந்தியா திரும்பிய குல்தீப் யாதவ், மிக சமீபத்தில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாகவும், அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப 4 முதல் 6 மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.
இதனால் குல்தீப் யாதவ் பெரும்பாலான உள்நாட்டு தொடர்களை தவர விடுவார் என கூறப்படுகிறது.