குவைத் தீவிபத்து: நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் மம்மூட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
குவைத் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களுக்கு இந்திய நடிகர்கள் கமலஹாசனும் மம்மூட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
குவைத் தீவிபத்து
குவைத்தின் மங்காப் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது என்றும், அதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம் என்பவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று, அதாவது, ஜூன் மாதம் 12ஆம் திகதி அதிகாலை 6 மணியளவில், திடீரென அந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. வேகமாக தீ பரவ, தீயில் சிக்கி சுமார் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் மம்மூட்டி இரங்கல்
தீவிபத்தில் பலியானவர்களுக்கு இந்திய நடிகர்கள் கமலஹாசனும் மம்மூட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.…
— Kamal Haasan (@ikamalhaasan) June 13, 2024
பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ள செய்தியில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான நேரத்தில் நீங்கள் தைரியத்தைக் கூட்டி ஆறுதல் அடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Heartfelt condolences to the families of those affected by the Kuwait fire accident. I pray that you gather courage and find solace in this difficult time.
— Mammootty (@mammukka) June 12, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |