பிரித்தானியாவில் நாயுடன் காணாமல் போன மலைபாதை வீரர்: உடல்களை உறுதிப்படுத்திய பொலிஸார்
கைல் சம்ப்ரூக் என்ற மலையேறுபவர் கடந்த வார இறுதியில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் காணாமல் போன நிலையில், அவரும், அவரது நாய் பேனின் உடலும் க்ளென்கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
காணாமல் போன மலைப்பாதை வீரர்
கைல் சம்ப்ரூக்(33) என்ற மலைப்பாதை வீரர் பிப்ரவரி 18ம் திகதி(சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் மலையேறுவதற்காக ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு வந்தடைந்தார்.
இதையடுத்து ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு, கைல் சம்ப்ரூக்(Kyle Sambrook) அவரது நாய் பேனுடன் காணாமல் போனது உறுதிப்படுத்தப்பட்டது.
PA
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் மலை மீட்புக் குழுக்கள் மற்றும் கடலோர காவல் படையினரால் ஒரு ஆண் மற்றும் நாயின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அவை தற்போது சம்ப்ரூக் மற்றும் அவரது நாய் பேன் என்பது அடையாளம் காணப்பட்டது, அத்துடன் சம்ப்ரூக் செவ்வாய் கிழமை வீடு திரும்புவதற்கு முன், Buachaille Etive Mor-ல் ஏறும் நோக்கத்துடன் நடந்து சென்று அப்பகுதியில் முகாமிட திட்டமிட்டிருந்தார் என்பது புரிகிறது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் நன்றி
கைல் சம்ப்ரூக்-கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தேடலில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sky News
சம்ப்ரூக்-கின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை," என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கைல் சம்ப்ரூக் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸுக்கு வந்ததிலிருந்து எந்த குடும்பத்தினருடனும் அல்லது நண்பர்களுடனும் தொடர்பு இல்லை.