புறப்பட்ட சில நொடிகளில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. பலி எண்ணிக்கை 16 ஆக இருக்கும் என அச்சம்
ரஷ்யாவில் புறப்பட்ட சில நொடிகளில் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
L-410 விமானம் ரஷ்யாவின் Tatarstan-ல் விபத்துக்குள்ளானதாக பிராந்திய அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவசரநிலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை Menzelinsk நகருக்கு அருகே விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்தது.
உடனே Menzelinsk தீயணைப்பு மற்றும மீட்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.
குறித்த விமானத்தில் 21 பாராசூட் வீரர்கள் மற்றும் விமானக் குழுவினர் இருவர் பயணித்துள்ளனர்.
இதில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு விமானிகள் உட்பட 16 உயிரிழந்திருக்கலாம் என அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாகவும், உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டிய இக்கட்டான நிலை விமானிக்கு ஏற்பட்டதாக குறிப்பிட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன