ரஷ்ய இராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை: அப்பாக்களை களமிறக்க முடிவு!
உக்ரைன் போரில் படைவீரர்கள் பலரை இழந்ததால், அவர்களது இடத்தை நிரப்ப, அப்பாக்களை களமிறக்க முடிவு செய்துள்ளது ரஷ்யா!
அதாவது, 60 வயது வரையுள்ள, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை இராணுவத்தில் இணையுமாறு ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைன், 18,300 ரஷ்யப் படைவீரர்கள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், 15,000 ரஷ்யப் படையினர் இறந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு கருதுகிறது.
ஆகவே, இழந்த வீரர்களுக்கு பதிலாக போர் செய்வதற்காக, ரஷ்யா, முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் இராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாக இராணுவத்தில் சேர்ந்த 18 முதல் 27 வயது வரையுள்ள அனுபவம் இல்லாத இராணுவ வீரர்கள்தான் ரஷ்ய இராணுவத்தில் கால் பகுதி இருக்கிறார்களாம்.
எனவே, இந்த அனுபவம் அதிகமில்லாத இராணுவ வீரர்கள் ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை கொண்டு செல்லும் ட்ரக் ஓட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள், அவர்களுடன் செல்லும் 60 வயதுடைய ஒரு வீரர் ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபடுவார்.
ஆக, ரஷ்ய இராணுவத்தில் படைவீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அப்பாக்களை களமிறக்க முயன்று வருகிறது அந்நாடு!