குடியிருப்பாளர்களை புலம்பெயர்ந்தோர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்! பிரபல பாடகியின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நியூயார்க் நகரத்தின் சுற்றுப்புறத்தை ஆக்கிரமித்துள்ளதாக, பிரபல அமெரிக்க பாப் பாடகி தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பிரபல பாடகியின் தந்தை
தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் நியூயார்க் நகரில், சுமார் 500 புலம்பெயர்ந்தோர் குழு தங்கள் சுற்றுப்புறத்தை ஆக்கிரமித்துள்ளதாக பாடகி லேடி காகாவின் தந்தை ஜோ ஜெர்மானோட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
Getty Images for NARAS
சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு எல்லா குழப்பங்களும் தொடங்கிவிட்டது என்று கூறிய அவர், அவர்கள் பொறுப்பற்ற நடத்தையில் ஈடுபடுவதாக சாடினார்.
மேலும் அவர் கூறுகையில், 'புலம்பெயர்ந்தோர் அதிக சத்துடன் இசைக்கிறார்கள், மோட்டார் பைக்குகளில் வீதிகளை ஏறி இறங்கி ஓடுகிறார்கள், இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை இது செல்கிறது. இதனால் இரவில் மோசமான பகுதியாக உள்ளது. சுத்தமான நடைபாதைகள் குப்பைகளாக மாறியுள்ளது' என தெரிவித்துள்ளார்.
நியூயார்க் மேயர்
இவ்வாறாக, புலம்பெயர்ந்தோர் நியூயார்க் நகரத்தின் சுற்றுப்புறத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் குடியிருப்பாளர்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ஜெர்மானோட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
Wireimage
இதற்கிடையில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறும்போது, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வீடு, உணவு மற்றும் ஆதரவளிக்க நகரம் ஒரு நாளைக்கு 9 மில்லியனுக்கும் அதிகமாக செலவழிக்கிறது என்றார். இதன்படி சூலை 2024க்குள் நகரம் 6.1 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |