புலம்பெயர் மக்களின் படகில் பச்சிளம் குழந்தையின் சடலம்: இத்தாலி அருகே சம்பவம்
இத்தாலிய தீவான லம்பேடுசாவிற்கு குடியேறியவர்களை ஏற்றிச் செல்லும் படகில் பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டதாக கடலோர காவல்படையினர் மீட்பு நடவடிக்கையின் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்கள்
படகு பயணத்தின் போது குழந்தை பிறந்திருக்கலாம் எனவும், ஆனால் அப்போதே இறந்திருக்கவும் வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த படகில் புலம்பெயர் மக்கள் 40 பேர்கள் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
@https://news.sky
வட ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர் மக்களுடன் வந்த படகு ஒன்று இந்த வார தொடக்கத்தில் கவிழ்ந்ததில் 5 மாதமேயான ஆண் குழந்தை ஒன்று கடலில் மூழ்கி பலியானது.
இத்தாலியில் சமீப நாட்களாக ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் குவிந்து வருவதால் நாடே திணறி வருகிறது. சட்டவிரோத குடியேறிகளை மொத்தமாக முடக்குவோம் என வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு தற்போது புலம்பெயர் மக்கள் விவகாரம் கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
கூட்டாக செயல்பட வேண்டும்
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 126,000 புலம்பெயர் மக்கள் இத்தாலியில் நுழைந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டினை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை இருமடங்கு என்றே கூறப்படுகிறது.
@ap
லம்பேடுசா தீவில் மட்டும் இந்த வாரம் இதுவரை 7,000 புலம்பெயர் மக்கள் தரையிறங்கியுள்ளனர். அந்த தீவின் குடியிருப்பாளர்களை விடவும் இந்த எண்ணிக்கை அதிகம் என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில், புலம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டாக செயல்பட வேண்டும் என பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். ஒருங்கிணைந்த கடற்படை நடவடிக்கைகள் இந்த விவகாரத்தில் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |