மொத்தமாக புரட்டிப்போட்ட நிலச்சரிவு... எகிறும் மரண எண்ணிக்கை: மாயமான பலர்
Ecuador தலைநகர் Quitoவில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 24 பேர் இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் காணாமல் போன 12 நபர்களை தேடும் பணியில் தீவிரம் கட்டிவருவதாக மேயர் Santiago Guarderas தெரிவித்துள்ளார்.
Quitoவில் திங்கள்கிழமை பெய்த பெரும் மழையால் தொழில்வர்த்தக குடியிருப்புகளை கொண்ட La Gasca மற்றும் La Comuna ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளில் நீர் நிரம்பி மண்சரிவை ஏற்படுத்தியது. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மிக பெரிய மண்சரிவு இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் இதுவரை 48 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து Alba Cotacachi என்ற குடியிருப்புவாசி தெரிவிக்கையில், திடீரென ஒரு பெருவெள்ளம் வந்து சாலைகளில் உள்ள கார்கள், மின்கம்பங்கள் என அனைத்தையும் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டது. நானும் எனது இரு மகள்களும் அருகில் இருந்த சுவரின் மீது ஏறி தப்பித்ததாகவும். மேலும் காணாமல் போன நபர்களை தேடி வருவருவதகவும் தெரிவித்தார்.
Quito பகுதியில் திங்கள் இரவு பெய்த மழையின் அளவு சுமார் ஒரூ சதுர மீட்டர்க்கு 75 liters என்ற அளவில் பதிவாகி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பெரும் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.