”கடலுக்கடியில் எரிமலை” டோங்கா தீவு பகுதிக்கு ஏற்பட்ட நிலை ஐரோப்பாவுக்கும் வரலாம்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் டோங்கா தீவுக்கு ஏற்பட்ட அதே நிலை ஐரோப்பாவுக்கும் ஏற்படலாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
டோங்கா தீவு அருகே கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை ஒன்று வெடித்ததில், அமெரிக்கா, ஜப்பான் வரையில் சுனாமி தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியிருந்த்து.
அதுபோன்ற ஒரு எரிமலை ஐரோப்பாவில் டைரேனியன் கடலுக்கடியில் கனன்று கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தற்போது எச்சரித்துள்ளனர். குறித்த எரிமலையானது இத்தாலியின் தெற்கு கடற்கரை பகுதியில், பலேர்மோ மற்றும் நேபிள்ஸ் இடையே அமைந்துள்ளது.
Marsili என அறியப்படும் அந்த எரிமலையானது தற்போதும் கனன்று கொண்டு உயிர்ப்புடன் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அந்த எரிமலை தொடர்பில் கண்காணிக்க போதுமாக கட்டமைப்புகள் இல்லை என்பதால், அதன் தற்போதைய நிலை தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே தெரிவிக்கின்றனர்.
1920ல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட குறித்த எரிமலையானது 70 கிலோமீற்றர் நீளம், 30 கிலோமீற்றர் அகலம் மற்றும் 2100 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆய்வாளர்களின் மதிப்பீட்டில், மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த எரிமலையானது வெடித்தால், அதனால் ஏற்படும் சுனாமி அலைகளுக்கு 20 மீற்றர் உயரம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு எனவும், எரிமலையானது உயிர்ப்புடன் இருந்தாலும் அதனால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என கணிக்க முடியாது எனவும் ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர்.