சூதாட்ட விடுதிக்கு முன்னால் நடைபெற்ற பயங்கரம்: ஆடைகளில் இரத்தத்துடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி
லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் பலி.
ஆடைகளில் கணிசமான அளவு இரத்தத்துடன் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய நபர் கைது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் உள்ள சூதாட்ட விடுதியின் முன்பு நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை 11:42 am மணியளவில் தெற்கு லாஸ் வேகாஸ் மாகாணத்தின் பவுல்வர்டு (Boulevard) 3100 பிளாக்கில் உள்ள ஒரு சூதாட்ட விடுதிக்கு முன்னால் பயங்கரமான கத்தி குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
los angeles times
இந்த தாக்குதலில் 6 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் மீதமுள்ள 5 பேர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரபல வெனிஸ் ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதிக்கு முன்னால் ஆடைகளில் கணிசமான அளவு இரத்தத்துடன் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் சந்தேகத்திற்குரிய நபர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்த நபரா? இந்த தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக நடத்தப்பட்டதா என தற்போது தெளிவாக தெரியவில்லை.
#BREAKING At approximately 11:42 a.m., the LVMPD received a report of a stabbing with multiple victims in front of a casino in the 3100 block of South Las Vegas Boulevard. At this time, at least six victims have been located. One victim has been declared deceased. pic.twitter.com/WegbwHZRf8
— LVMPD (@LVMPD) October 6, 2022
இந்நிலையில் பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சாலைகள் மூடப்பட்டு விசாரணைகள் தொடர்வதால், பொதுமக்கள் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டால்…பிரித்தானியாவில் மூன்று மணி நேர மின்தடை: ESO எச்சரிக்கை
மேலும் காவல்துறையினர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சந்தேக நபர்களின் அடையாளங்கள் குறித்த விவரங்களை இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.