தயவு செய்து முடிவை மறுபரிசீனை செய்யுங்கள்! இலங்கை நட்சத்திர வீரருக்கு லசித் மலிங்கா கோரிக்கை
இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
பானுகா ராஜபக்ச திங்கட்கிழமை தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்ததாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
அந்த கடிதத்தில் இலங்கை கிரிக்கெட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பானுகா குறிப்பிட்டுள்ளாராம்.
இந்நிலையில், பானுகா தனது ஓய்வு குறித்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மலிங்கா ட்விட்டரில் பதிவிட்டதாவது, சர்வதேச அளவில் நாட்டிற்காக விளையாடுவது சுலபமான காரியம் அல்ல மற்றும் வீரர்கள் எப்போதும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.
Representing your country at International level is not an easy task and players always face so many challenges.
— Lasith Malinga (@ninety9sl) January 5, 2022
I truly believe that @BhanukaRajapak3 has a lot more to give to Sri Lankan cricket and I request him to reconsider his decision to retire from International cricket🤞
இலங்கை கிரிக்கெட்டுக்காக பானுகா செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என நான் உண்மையிலேயே நம்புகிறேன்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை பானுகா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என மலிங்கா தெரிவித்துள்ளார்.