இலங்கை மற்றும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க களமிறங்கும் ஜாம்பவான் லசித் மலிங்கா! முக்கிய தகவல்
இலங்கை வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா அவுஸ்திரேலியாவில் பல்வேறு வயது பிரிவில் உள்ள இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் பயிற்சி அகாடமியுடன் தொடர்புடைய இலங்கை அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரபாத் நிஸ்ஸங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிபாத் கூறுகையில், வீரர்களை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தயார்படுத்த வெள்ளை பந்தை கொண்டு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும்.
அவர் எங்கள் அகாடமியில் உள்ள வீரர்களுடன் தனது பயிற்சிப் பணிகளைத் தொடங்கத் தயாராகிவிட்டார்.
மலிங்கா உள்ளூர் பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பார். அவர் ஆறு வாரங்கள் எங்களுடன் இருப்பார் மற்றும் மலிங்காவின் நிபுணத்துவம் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களுக்கு, குறிப்பாக இலங்கை மற்றும் இந்திய வீரர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும் என கூறியுள்ளார்.