கிரீஸின் கடைசி மன்னர் மரணம்! 23 வயதில் அரியணை ஏறிய இளவரசர் பிலிப்பின் மருமகன்
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் கான்ஸ்டன்டின் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.
கடைசி மன்னர்
தனது 23வது வயதில் கிரீஸ் நாட்டின் மன்னராக முடி சூட்டிக்கொண்டவர் இரண்டாம் கான்ஸ்டன்டின். ஆனால் அவரது ஆட்சிக் காலம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
மன்னராட்சி முறைக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து கான்ஸ்டன்டின் நாட்டை விட்டு வெளியேறினார்.
@AFP
கிரீஸில் மக்களாட்சி
அதன் பின்னர்1974யில் கிரீஸில் மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. அப்போது கான்ஸ்டன்டின் மீண்டும் நாடு திரும்பினார்.
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மருமகனான கான்ஸ்டன்டின், கடந்த வாரம் வயது மூப்பு காரணமாக மூச்சு விடுவதில் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 82.
1994ஆம் ஆண்டு அப்போதைய சோசலிச அரசு, கான்ஸ்டன்டினின் குடியுரிமையைப் பறித்ததுடன் அரச குடும்பத்தின் சொத்தை அபகரித்தது. அதனை எதிர்த்து கான்ஸ்டன்டின் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவருக்கு 2002யில் 12 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டது.