யாருமில்லாத 1960-களின் குடியிருப்பில் வசிக்கும் நபர்: வெளியேற மறுப்பு..கூறும் காரணம்
பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே நபர், இடிக்கப்படவிருக்கும் தனது வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார்.
1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள்
கிரேட்டர் மான்செஸ்டரின் ரோச்டேலில் உள்ள Lower Falinge குடியிருப்புப் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.
RBH என்ற நிறுவனம் அந்தக் கட்டிடங்களை இடித்துவிட்டு, அங்கு 270 புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. அங்குள்ள 7 கட்டிடங்களில் ஆறு ஏற்கனவே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் மொத்தம் 126 வீடுகள் இடிக்கப்பட உள்ளன.
ஆனால், அவற்றில் ஒன்றான Zedburgh கட்டிடத்தில் 51 வயதான ஆண்டி ரோச் என்ற நபர் வசிக்கிறார். இங்கிருக்கும் கடைசி நபரான இவரின் ஒற்றை படுக்கையறை கொண்ட வீடு மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.
28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில்
கடந்த 28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் வேலையில்லாத நபரான ரோச் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார்.
தானும் தன் துணையும் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடும் ரோச், "நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை; என் பெற்றோரின் வீட்டை விட்டு வந்ததிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்த இடம் இதுதான்" என்கிறார்.
தன்னைச் சுற்றியுள்ள நடைபாதைகள் வெறிச்சோடிக் கிடந்தாலும், சன்னல்கள் பலகைகளால் மூடப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்வதை இன்னும் விரும்புவதாக அவர் உறுதியாகக் கூறுகிறார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |