முழு ஊரடங்கை மீண்டும் அமுல்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு! தொற்று அதிகரிப்புக்கு பின்னணி காரணம் என்ன?
நாட்டில் அதிகரிகத்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடான லாட்வியா, ஒரு மாத கால முழு ஊரடங்க அறிமுகப்படுத்தியுள்ளது.
குளிர்காலம் நெருங்கும் நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு லாட்வியா ஆகும்.
உள்ளூர் நேரப்படி இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகிறது.
அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும். நவம்பர் 15ம் திகதி வரை லாட்வியாவில் அனைத்து கடைகள், உணவகங்கள், பள்ளிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து மூடப்படும்.
முக்கியமான வேலைகள் மட்டுமே தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
லட்வியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வந்த நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அங்கு தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தது, இதனால் நாட்டின் சுகாதார அமைப்பு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
தொற்று அதிகரிப்புக்கு நாட்டின் தடுப்பூசி விகிதமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது, இது ஐரோப்பிய ஒன்றிய சராசரியை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்கள் சுகாதார அமைப்பு அபாயத்தில் இருக்கிறது, இந்த நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என லட்வியா பிரதமர் Krisjanis Karins கூறினார்.
தடுப்பூசி விகிதம் குறைவாக உள்ள ருமேனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.