ரகசியங்களை வெளியிட்டார்.... முன்னாள் பிரதமர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதியாலா நீதிமன்றம்
இம்ரான் கானுடன், அவரது கட்சியின் தலைவர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அதியாலா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நீதிபதி தீர்ப்பை அறிவித்துள்ளார்.
@getty
தற்போது 71 வயதாகும் இம்ரான் கான், ஏப்ரல் 2022ல் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்டார். அத்துடன் ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருக்கும் அவர், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று கூறி வருகிறார். மட்டுமின்றி, பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் திகதி பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இம்ரான் கானின் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இல்லையெனில் அவர் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் களமிறங்க முடியாத சூழல் ஏற்படும் என்றே கூறப்படுகிறது.
150க்கும் மேற்பட்ட வழக்குகள்
சமீபத்தில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் நாடு தழுவிய பேரணிகளை நடத்தினர், இதில் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறையுடன் மோதலுக்கும் வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
@reuters
இதனையடுத்து பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான் கானின் கட்சியினருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கட்சி சின்னத்தை மாற்ற வைத்தது. மேலும் முக்கிய தலைவர்களை சிறைக்கு அனுப்பவும் தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுத்தது.
பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான இம்ரான் கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் தான் அரசாங்க ரகசியத்தை வெளியிட்டதாக கூறி, தற்போது தண்டனை விதித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |