இது ஒழிய போவதில்லை... இப்படி வாழ பழகுங்கள்! பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொரோனா மருத்துவமனைகளில் வாழ பிரித்தானியர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE) ஆலோசகரும், பேராசிரியருமான Andrew Hayward இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் கொரோனா ரைவஸ் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்த சாத்தியம் இருக்கிறது என பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார்.
இந்நிலையில் பேராசிரியர் Andrew Hayward கூறியதாவது, நீண்ட காலத்திற்கு நாம் வைரஸ் பிடியில் இருக்கிறோம், எனவே கொரோனா சாதரணமாக ஒழிய போவதில்லை.
நாம் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டாலும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா தொடர்ந்து பரவும்.
எனவே சமூகம் செயல்படக்கூடிய மற்றும் வைரஸுடன் வாழக்கூடிய ஒரு நிலைக்கு நாம் மாற வேண்டும்.
கொரோனாவுடன் தொடர்புடைய மருத்துவமனைகளுடனும் நாம் வாழ பழக வேண்டும் என பேராசிரியர் Andrew Hayward தெரிவித்துள்ளார்.