ஷோயப் அக்தருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? இறுதிச்சடங்கில் பங்கேற்பு
ஷோயப் அக்தர் சகோதரரின் இறுதிச்சடங்கில் பயங்கரவாதிகள் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிச்சடங்கில் பங்கேற்ற பயங்கரவாதிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான ஷோயப் அக்தரின் மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர் கடந்த ஜூன் 24 அன்று காலமானார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள H-8 கல்லறைத் தோட்டத்தில் ஷாஹித்தின் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.
இதில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத்தலைவர் சைஃபுல்லா கசூரி, அதன் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மர்கஸி முஸ்லிம் லீக்கின்(PMML) தலைவர் இனாம்-உர்-ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், PMML துணைப் பொதுச் செயலாளர் அப்துல்லா தூர், மண்டலப் பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் உமர், கித்மத் கமிட்டியின் தலைவர் அம்ஜத் பட்டி மற்றும் பலரும் உடனிருந்தனர்.
இந்தியாவில் நடந்த 26/11 மும்பை தாக்குதல்கள் மற்றும் பஹல்காம் தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு இருந்துள்ளது.

சைஃபுல்லா கசூரி, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.
இதன் மூலம், ஷோயப் அக்தர் அல்லது அவரது சகோதரர் இந்த அமைப்பினருடன் தொடர்பில் இருந்தாரா அவர்கள் ஏன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஷோயப் அக்தர் பதிலளிக்கவில்லை.
பயங்கரவாத அமைப்பினர் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம், பாகிஸ்தான் அரசு அவர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |