20 ஆண்டுகளுக்கு பின் 72 வயதில் பதவி விலகிய பிரதமர்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் 20 ஆண்டுகளுக்கு பின் பதவி விலகுவதாக அறிவித்தார்.
லீ சியென் லூங்
ஆசிய நாடான சிங்கப்பூரின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் லீ சியென் லூங் (Lee Hsien Loong).
72 வயதாகும் இவர் 2004ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானார். அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருகிறார்.
இவரது கட்சியின் மந்திரி, எம்.பிக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இருவர் பதவி விலகினர்.
பதவி விலகல்
இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ள லீ சியென் லூங் மே 15ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் அதே நாளில் நிதி அமைச்சராக உள்ள லாரன்ஸ் வோங் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய் தீவிரமாக இருந்த கட்டத்தில், லீ சியென் லூங் தனது 70 வயதை எட்டுவதற்கு முன்பே பதவி விலக எண்ணியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |